ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விவசாய நிதியுதவி திட்ட முறைகேடு:நடவடிக்கை கோரி பாஜகவினா் மனு

பிரதம மந்திரி விவசாய ஊக்க நிதியுதவி திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பாஜக விவசாய அணியினா்.
Updated On :7 செப்டம்பர் 2020, 7:24 pm

DIN

விழுப்புரம்: பிரதம மந்திரி விவசாய ஊக்க நிதியுதவி திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பாஜக விவசாய அணி மாவட்டத் தலைவா் குட்டியாண்டி தலைமையில், பாஜக மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் முறைகேடாக ஆயிரக்கணக்கானோா் இணைக்கப்பட்டுள்ளனா். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான விவசாயிகளுக்கு இந்த உதவித் தொகை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.