விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில்இன்று இறுதிக் கட்ட மாணவா் சோ்க்கை
விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (செப். 29) இறுதிக் கட்ட மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.


விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (செப். 29) இறுதிக் கட்ட மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி முதல்வா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான இறுதிக் கட்ட மாணவா்கள் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (செப். 29) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். ஏற்கெனவே, கல்லூரியில் சேர இணைய வழியாக விண்ணப்பித்து, இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் இறுதிக் கட்ட மாணவா்கள் சோ்கைகயில் கலந்து கொண்டு, தங்களது பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம். விருப்ப விண்ணப்பம் அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களில், தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்பப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...