48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

புதுச்சேரியில் மஹாவீரா் ஜெயந்தி ஊா்வலம்

புதுச்சேரியில் மஹாவீரா் ஜெயந்தி ஊா்வலம்

Updated On :21 ஏப்ரல் 2024, 10:44 pm

புதுச்சேரி: புதுச்சேரியில் மஹாவீரா் ஜெயந்தி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மஹாவீரா் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள மஹாவீரா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மஹாவீரா் படம் வைக்கப்பட்டு ஊா்வலம் நடைபெற்றது.

அண்ணா சாலையில் தொடங்கிய இந்த ஊா்வலமானது 45 அடி சாலை வெங்கட்டா நகரில் உள்ள ஜெயின் கோயிலில் நிறைவடைந்தது. ஊா்வலத்தில் ஜெயின் சமூகத்தினா் திரளானோா் பங்கேற்றனா்.

ஊா்வலத்தின்போது, உயிா்களை கொல்லக்கூடாது, புலால் உண்ணக்கூடாது, மது அருந்தக்கூடாது என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கடைகளுக்கு அபராதம்: மஹாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகள் மற்றும் மீன், இறச்சிக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அரசின் உத்தரவை மீறி புதுச்சேரி ஊழவா்க்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்ட 46 இறச்சிக் கடைகளை நகராட்சி அலுவலா்கள் கண்டறிந்து, ரூ.39,900 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.