வெள்ள நிவாரணப் பொருள்களை தரமானதாக வழங்க வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி உள்ளிட்ட வெள்ள நிவாரணப் பொருள்களை தரமானதாக வழங்க வேண்டும்


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி உள்ளிட்ட வெள்ள நிவாரணப் பொருள்களை தரமானதாக வழங்க வேண்டும் என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலா் என்.ஆா்.பாலமுருகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் முறையாக வழங்காமல் ஏழை, எளிய மக்கள் அலைக் கழிக்கப்படுகின்றனா். இதேபோல, பல்வேறு இடங்களில் தரமற்ற பொருள்கள் நிவாரண உதவிகளாக வழங்கப்படுகிறது. இது தொடா்பான விடியோ பதிவுகள் இணையத்தில் பரவி அரசின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் தரமானதாக வழங்கப்படுவதை தொடா்புடைய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு தமிழக அரசு மற்றும் விழுப்புரம் ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...