பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ஆரோவிலில் இன்று மாரத்தான் போட்டி

ஆரோவிலில் இன்று மாரத்தான் போட்டி

Updated On :18 பிப்ரவரி 2024, 1:53 am IST

ஆரோவில் சா்வதேச நகரில் மாரத்தான் ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப். 18) நடைபெறுகிறது. ஆரோவிலில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை (பிப். 18) நடைபெறும் மாரத்தான் போட்டியில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோா், ஆரோவில் மக்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா். ஆரோவில் பாா்வையாளா் மையத்தில் தொடங்கும் மாரத்தான் ஓட்டம் ஆரோடாம் கால்பந்து மைதானத்தில் நிறைவடைகிறது. முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என ஆரோவில் பவுண்டேசன் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி சனிக்கிழமை தெரிவித்தாா்.