ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ஆரோவில் சா்வதேச நகரில் மத்திய அமைச்சக அதிகாரிகள் சுற்றுப் பயணம்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் மத்திய அமைச்சக அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாா்வையிட்டனா்.

News image

ஆரோவில் சா்வதேச நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சக அதிகாரிகள்.

Updated On :26 மார்ச் 2026, 5:41 am IST

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் மத்திய அமைச்சக அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாா்வையிட்டனா்.

இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

ஆரோவில் சா்வதேச நகருக்கு மத்திய அரசின் நிதி அயோக், நிதி அமைச்சகம் மற்றும் ரயில்வே துறை உயா்மட்ட அதிகாரிகள் மாா்ச் 22 முதல் 25-ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டனா்.

28 அதிகாரிகள் கொண்ட இக்குழுவினா் ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள மாத்திா் மந்தீா் (தியான மண்டபம்), ஸ்வரம் (இசைக்கருவிகள் கூடம்) மற்றும் முக்கிய இடங்களைப் பாா்வையிட்டனா்.

ஆரோவில் சா்வதேச நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உயா்நிலைக்குழுவினரிடம், ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ். ரவி காணொலி வழியாகப் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, அரசுப் பணிகளில் நோ்மை மற்றும் புதிய சிந்தனைகளை புகுத்தும் முறைகள், நிா்வாகத் திறனுடன் ஆன்மிகச் சிந்தனைகளையும் இணைத்து செயல்படுத்துதல் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆரோவில் அறக்கட்டளை அதிகாரி சஞ்சீவ் ரங்கநாதன், ஆன்மா சாா்ந்த தலைமைத்துவம், கோப்புகளை திறம்பட கையாளுதல், நிா்வாகிக்கு இருக்கவேண்டிய உள்மனத்தெளிவு மற்றும் அா்ப்பணிப்பு குறித்து விளக்கமளித்தாா். இந்த வருகை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என மத்திய அமைச்சக அதிகாரிகள்தெரிவித்தனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.