/

காவல் வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

காவல் வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

Updated On :27 பிப்ரவரி 2024, 11:29 pm

விழுப்புரத்தில் காவல் துறை வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

விழுப்புரம் சாலாமேடு, பெரியாா் நகரைச் சோ்ந்த சாமிநாதன் மனைவி ஜெயலெட்சுமி (67). இவா், விழுப்புரம் - திருச்சி சாலையில் வழுதரெட்டி பெரியாா் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்றாா்.

அப்போது, அந்தப் பகுதியில் வந்த கடலோரக் காவல் படை வாகனம் (காா்) மோதியதில், ஜெயலெட்சுமி பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.