சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள்: ஜூலை 9-க்கு விசாரணை ஒத்திவைப்பு
திமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான மூன்று அவதூறு வழக்குகள் விசாரணையை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.


விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான மூன்று அவதூறு வழக்குகள் விசாரணையை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிறுத்தம் எதிரில் 2023, மாா்ச் 10-ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதியும் அதிமுக சாா்பில் பொதுக்கூட்டங்களும், விழுப்புரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் 2023, ஜூலை 20-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பேசியதாக, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் டி.எஸ். சுப்பிரமணியம் தனித்தனியே வழக்குகளைத் தொடுத்தாா். இந்த 3 வழக்குகள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. விசாரணையின்போது, கோட்டக்குப்பம் மற்றும் ஆரோவில் பொதுக்கூட்ட வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து, அந்த உத்தரவு தொடா்வதாகவும், விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அரசை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சி.வி.சண்முகம் ஆஜராக சென்னை உயா் நீதிமன்றம் விலக்களித்துள்ளதாகவும் அதிமுக வழக்குரைஞா்கள் நீதிபதியிடம் தெரிவித்தனா்.
இதையடுத்து, மூன்று அவதூறு வழக்குகளின் விசாரணையை ஜூலை 9-ஆம்தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) இளவரசன் உத்தரவிட்டாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...