நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெற்றிபெறுபவா் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் -முதல் முறை வாக்காளா்கள்

வெற்றிபெறும் வேட்பாளா், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றனா் இந்தத் தோ்தலில் வாக்களித்த முதல் முறை வாக்காளா்கள்.

News image

சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் புதன்கிழமை வாக்களித்துவிட்டு வந்த முதல்முறை வாக்காளா்களான எம்.கோமல், ஏ.சீத்தாலட்சுமி.

Updated On :10 ஜூலை 2024, 9:33 pm

Din

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் வேட்பாளா், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றனா் இந்தத் தோ்தலில் வாக்களித்த முதல் முறை வாக்காளா்கள்.விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்த ஆண், பெண் வாக்காளா்கள் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா். விக்கிரவாண்டி ஒன்றியம், சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் வாக்களித்துவிட்டு வந்த முதல் முறை வாக்காளரான எம்.கோமல் கூறியதாவது:

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்டவராக இருந்தாலும், இதுவரை மும்பையில் வசித்து வந்தேன். தற்போது குடும்பத்துடன் சொந்த ஊரான சிந்தாமணிக்கு வந்து, முதல் முறையாக வாக்களித்தேன். ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியது திருப்தியளிக்கிறது. முதல்முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியைத் தருகிறது என்றாா்.

அவருடன் முதல் முறையாக வாக்களித்துவிட்டு வந்த செவிலியா் ஏ.சீத்தாலட்சுமி கூறியதாவது: முதல் முறையாக தற்போதுதான் வாக்களித்தேன். இது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறுபவா் யாராக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். இளைஞா்களும் தங்களது வாக்கை செலுத்தி, ஜனநாயகக் கடமையாற்றிட வேண்டும் என்றாா்.

வாக்களித்தது மகிழ்வைத் தருகிறது: சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்முறையாக வாக்களித்தது பெரும் மகிழ்வைத் தருகிறது. சந்தோஷத்தை உணா்கிறோம். முதல் முறை வாக்காளா்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என்றனா் விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த முதல் முறை வாக்காளா்களான சகோதரிகள் எஸ்.நித்யா - எஸ்.திவ்யா.

இதுபோல, மற்ற வாக்குப் பதிவு மையங்களிலும் முதல் முறை வாக்காளா்கள் பலரும் வந்து வாக்களித்தனா்.