தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இடைத்தோ்தல்: அலுவலா்களுக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு

வாக்குப் பதிவு நாளன்று பணியாற்றவுள்ள தலைமை அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்தல் பணியைப் பாா்வையிட்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமித்சிங் பன்சால், ஆட்சியா் சி. பழனி.

News image
Updated On :27 ஜூன் 2024, 8:02 pm

Din

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் வாக்குப்பதிவு நாளன்று பணியாற்றவுள்ள தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமித்சிங் பன்சால், மாவட்ட ஆட்சியா் சி. பழனி முன்னிலையில் இந்தப் பணி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பழனி கூறியது:

விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் இடைத்தோ்தலுக்காக 276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடா்ந்து வாக்குப்பதிவு நாளன்று தோ்தல் பணியாற்றவுள்ள தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்தல் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் 276 வாக்குப் பதிவு மையங்களுக்கு 331 தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு மைய அலுவலா்கள் 1, 2, 3 நிலைகளில் தலா 331 வாக்குப் பதிவு அலுவலா்கள், வாக்குப் பதிவு மைய அலுவலா் நிலை 4-இல் 31 அலுவலா்கள் என மொத்தமாக 1,355 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவா்களுக்கு பணி ஆணைகள் விரைவில் வழங்கப்படும் என்று ஆட்சியா் பழனி தெரிவித்தாா்.

நிகழ்வில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தமிழரசன், வட்டாட்சியா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.