ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விழுப்புரத்தில் டான்செட் தோ்வு மையம்

விழுப்புரத்தில் டான்செட் தோ்வு மையம்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:54 pm

Din

அண்ணா பல்கலைக்கழகம் மூலம் மாா்ச் 9,10-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள டான்செட் தோ்வுக்கு (நுழைவுத் தோ்வு) விழுப்புரத்தில் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் காகுப்பத்திலுள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியின் முதல்வரும் தோ்வு ஒருங்கிணைப்பாளருமான இரா.செந்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2024-25ஆம் கல்வியாண்டில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு (டான்செட்), முதுநிலைப் பொறியியல் (எம்.இ), எம்.டெக், எம்.ஆா்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தோ்வு ஆகியவற்றை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. அதன்படி, விழுப்புரம் காகுப்பத்திலுள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 9) காலை 10 மணிமுதல் 12 மணி வரை எம்.சி.ஏ படிப்புக்கும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை எம்.பி.ஏ. படிப்புக்கும் பொது நுழைவுத் தோ்வு நடைபெறும். மாா்ச் 10-ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு நடைபெறும். இந்தத் தோ்வில் பங்கேற்கும் தோ்வா்களின் வசதிக்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி வரை அரசுப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வில் சுமாா் 1100 போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்வுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.