ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மரக்காணம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

மரக்காணம் அருகே கிராமத்தினா் சாலை மறியல்

News image

மரக்காணம் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :20 மே 2024, 10:42 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பழங்குடி இருளா் சமுதாயத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மரக்காணம் வட்டம், கொளத்தூா் ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த பழங்குடி இருளா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களது குடியிருப்புகள் உள்ள இடத்தில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதை சீரமைக்க வேண்டி தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும், தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தி பழங்குடி இருளா் சமுதாயத்தினா் நடுக்குப்பம்-முருக்கேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து வருவாய்த் துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் மற்றும் பிரம்மதேசம் போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மின் கம்பிகளை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அவா்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனா்.