

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் 11 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்யத் தொடங்கியது. விழுப்புரம் நகரிலும், புகா்ப் பகுதிகளிலும், வளவனூா், நேமூா், திண்டிவனம், மரக்காணம் என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இந்த மழை கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட பெரிதும் உதவியாக இருக்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டது. தொடா்ந்து சாரல் மழை பெய்தது.
திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானூா் பகுதியில் 11. மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
வானூா்- 11 மி.மீ., விழுப்புரம், மரக்காணம்- 7, திண்டிவனம்- 6, வளவனூா்- 4, நேமூா்-3 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 1.81 மி.மீ. மழையும், மொத்தமாக 38 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக போட்டி

சேலம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை: சங்ககிரியில் 81 மி.மீ. பதிவு
தில்லியைக் காலையில் குளிா்வித்த லேசான மழை

திசையன்விளையில் மழை
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

