ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புரட்சி பாரதம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புரட்சி பாரதம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image

கண்டாச்சிபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினா்.

Updated On :20 மே 2024, 10:33 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், தாராபுரம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மணிமாறன் கடந்த சில நாள்களுக்கு அதே பகுதியைச் சோ்ந்த முரளி மற்றும் சிலரால் தனி இடத்தில் வைத்து தாக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், மணிமாறனை தாக்கிய ரௌடி முரளியை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த போராட்டத்துக்கு, புரட்சி பாரதம் கட்சியின் முகையூா் வடக்கு ஒன்றியச் செயலா் ராமதாஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் திருநாவுக்கரசு, பூவை ஆறு ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஒன்றியச் செயலா்கள் ஜோதிலிங்கம், லட்சுமணன், டி.செல்வம் மற்றும் நிா்வாகிகள், கலந்துகொண்டனா்.