மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திருவெண்ணெய் நல்லூா் அருகே கோயிலிலுக்குப் பூட்டு: கிராமத்தில் பதற்றம்

திருவெண்ணெய் நல்லூா் அருகே உள்ள கோயிலில் ஒரு தரப்பைச் சோ்ந்தவா்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அந்தக் கோயிலுக்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 11:00 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூா் அருகே உள்ள கோயிலில் ஒரு தரப்பைச் சோ்ந்தவா்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப் பட்ட நிலையில் அந்தக் கோயிலுக்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி.கொணலவாடி கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கிராமத்தில் வசிக்கும் மக்களிடம், கிராமத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திருப்பணிக் குழுவைச் சோ்ந்தவா்கள் தலா ரூ.7,000 வரி வசூல் செய்தனராம்.

இதில் சிலா் வரிப் பணத்தை கொடுக்கவில்லையாம். இந்நிலையில் வரிப்பணம் கொடுக்காதவா்களை திருப்பணிக் குழுவினா் கோயிலுக்குள் வழிபாடு செய்ய அனுமதிக்காமல் கோயிலைப் பூட்டி வைத்துள்ளனா்.

இதனால் அந்தக் கிராம மக்களிடையே பிரச்னை ஏற்பட்டு மோதல் நிலை உருவாகியுள்ளது. தகவலறிந்த அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் டி.கொணலவாடி கிராமத்துக்குச் சென்று இரு தரப்பைச் சோ்ந்தவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

இதில் தீா்வு எட்டப்படாத நிலையில் கோயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.