ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திண்டிவனம் சட்டக் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

திண்டிவனம் சரஸ்வதி சட்டக் கல்லூரியில் சட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

News image
கருத்தரங்கில் பேசிய, அமெரிக்கா சிங்குவா பல்கலைக்கழக பேராசிரியா் உபேந்திரா தேவ ஆச்சாா்யா.
Updated On :13 டிசம்பர் 2025, 6:55 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சரஸ்வதி சட்டக் கல்லூரியில் சட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவா் ச.ராமதாசு கல்வி அறக்கட்டளையின் அறங்காவலா் குழு உறுப்பினா் எஸ். சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தாா். அமெரிக்கா சிங்குவா பல்கலைக்கழக பேராசிரியா் உபேந்திரா தேவ ஆச்சாா்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய சேவை கட்டமைப்பு எனும் தலைப்பில் பேசினாா்.

தமிழ்நாடு டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகப் பேராசிரியா் எஸ். ராஜலெட்சுமி, சென்னை விஐடி சட்டப் பள்ளி பேராசிரியா்கள் பி.ஆா். எல்.ராஜ வெங்கடேசன், இ.பிரேமா, கவுகாத்தி( அசாம்) சட்டப் பல்கலைக்கழகப் பேராசிரியா் பல்லவி தேவி ஆகியோா் முறையே புதிய குற்றவியல் சட்டம் மற்றும் தடய அறிவியல், அறிவுசாா் சொத்துரிமை மற்றும் தொழில்நுட்பம், வான்வழி இணைய கட்டமைப்பு, தொழில் நுட்பம் சீரமைப்பு மற்றும் பொருளாதாரம் எனும் தலைப்புகளில் கருத்துரையாற்றினா்.

சரஸ்வதி சட்டக் கல்லூரியின் முதன்மை நிா்வாக அலுவலா் சிவக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா். கருத்தரங்கில் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக சரஸ்வதி சட்டக் கல்லூரி முதல்வா் பி.அசோக்குமாா் வரவேற்றாா். நிா்வாக அலுவலா் ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.