பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம்

News image
திண்டிவனம் சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.
Updated On :15 டிசம்பர் 2025, 10:10 pm

Syndication

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

டித்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட சவுக்குப் பயிா்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணத்தை வழங்கவேண்டும். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், பேரணி கிராமம், அய்யனாபுரம், பெரமண்டூா், காட்ராம்பாக்கம் பகுதிகளில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவா்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும். ஆலகிராமம் -தென்புத்தூா் சாலையை அகலப்படுத்தவேண்டும். ரெட்டணை கிராமச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தாா்சாலை மற்றும் பாலம் அமைக்கவேண்டும். ஏரிக்கான நீா்வரத்து வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்களை வலியுறுத்தி இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி, ஆா்ப்பாட்டம் செய்தனா்.

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: இதையடுத்து திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சவுக்குப் பயிா்களை கணக்கெடுப்பு நடத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , பிற கோரிக்கைகள் குறித்து விழுப்புரம் ஆட்சியரின் நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தாா்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். திங்கள்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டமானது பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் சந்திரபிரபு தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் மு. உலக நாதன், மயிலம் ஒன்றியத் தலைவா் ஜெயப்பிரகாஷ், சங்க நிா்வாகிகள் முத்துவேல், ஹரிதாஸ், முருகன், சரவணன், ரமணன், வேணுகோபால்( மரக்காணம் ஒன்றியம்) மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனா்.