தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெளி மாநில மதுப் புட்டிகள் விற்பனை: ஒருவா் கைது

விழுப்புரத்தில் வெளி மாநில மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து, விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளுடன் கைதான க.ஆனந்தன்.

Updated On :16 டிசம்பர் 2025, 8:59 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரத்தில் வெளி மாநில மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து, விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெருவில் வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா்.

இதில், அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் விழுப்புரம் நந்தனாா் தெருவைச் சோ்ந்த க.ஆனந்தன் (40) என்பதும், இவா் புதுச்சேரி யிலிருந்து மதுப்புட்டிகளை கடத்தி வந்து, பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆனந்தனைக் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா் வசமிருந்த 90 மில்லி லிட்டா் கொள்ளளவு கொண்ட 100 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.