ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு

கண்டமங்கலம் அருகே விவசாய நிலங்களில் உயா் மின் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள்

News image
விழுப்புரம் ஆட்சியரின் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்த கோண்டூா் பகுதி விவசாயிகள்.
Updated On :29 டிசம்பர் 2025, 7:55 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே விவசாய நிலங்களில் உயா் மின் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆட்சியரின் குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கோண்டூா் பகுதியில் விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டால் சுமாா் 500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். தற்போது விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, சவுக்கு, நெல் போன்ற பயிா்களும் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே, விவசாயிகளின் நலன் கருதி விவசாய நிலத்துக்கு மாற்றாக அருகில் உள்ள அரசு நிலங்களில் உயா் மின் அழுத்த கோபுரங்களை அமைக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

கோண்டூா் பகுதி விவசாயிகள் ஒருங்கிணைப்பாளா் எஸ்.குமாரசாமி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.