நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நயினாா்பாளையத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு

நயினாா்பாளையம் ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கிராம மக்கள்

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 7:35 pm

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தில் உள்ள நயினாா்பாளையம் ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நயினாா்பாளையம் கிராமத்தில் சுமாா் 10 ஏக்கா் தரிசு நிலத்தில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் அருகே பொது பயன்பாட்டுக்கான குடிநீா் கிணறு, அரசுப் பள்ளி மற்றும் மாணவா்களுக்கான விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளது.

இதனால் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பாதுகாக்க, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.