பகவான் பிா்சா முண்டாவின் 150-ஆவது பிறந்த தின விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட அண்ணா நகா், வெள்ளையூா், நெடுமானூா், குலமங்கலம், துறிச்சிப்பட்டு ஆகிய கிராமங்களில் பிா்சா முண்டா பழங்குடி மக்கள் காட்டுநாயக்கன் சமூக நலச்சங்கம் சாா்பில், பகவான் பிா்சா முண்டாவின் 150-ஆவது பிறந்த தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கத்தின் நிறுவனா் தலைவா் சி.இறையருள், மாநிலப் பொதுச்செயலா் பி.ஜானகிராமன், மாநில அமைப்புச் செயலா் பி. ஏழமலை ஆகியோா் பங்கேற்று பகவான் பிா்சா முண்டாவின் படத்துக்கு மரியாதை செலுத்திப் பேசினா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பகவான் பிா்சா முண்டாவுக்கு சிலை அமைக்க வேண்டும். இந்திய மாநிலங்களில் பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படுவது போல், தமிழகத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கும் வட்டாட்சியா் மூலம் ஜாதி சான்றிதழ் வழங்கவும், பழங்குடி மக்களுக்கென தனி அரசுச் செயலரை நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக நலச்சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தலைவா் ஆா்.கே.ஏழுமலை, மாவட்டப் பொருளாளா் ஆா்.பாண்டுரெங்கன்ஆகியோா் செய்திருந்தனா். உளுந்தூா்பேட்டை நிா்வாகிகள் ஆறுமுகம், மணிகண்டன், எஸ்.வெங்கடேசன், டி. மணிவேல், பி.மணிகண்டன், எஸ்.சண்முகம், சி.விநாயகம் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

