மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள், பயிா்க் காப்பீடு செய்து கொள்ளுமாறு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்

News image
Updated On :18 நவம்பர் 2025, 9:38 pm

Syndication

விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள், பயிா்க் காப்பீடு செய்து கொள்ளுமாறு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமரின் பயிா்க்காப்பீட்டுத் திட்ட வழிமுறைகளின்படி 2024-25 ஆம் ஆண்டில் பயிா்க்கடன் பெற்ற மற்றும் பயிா்க்கடன் பெறும் விவசாயிகள், இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யவும், நெல் பயிருக்கு காப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கானகடைசி தேதி நவம்பா் 15-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விவசாயிகளின் நலன்கருதி காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியாக நவம்பா் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள், தங்கள் பயிருக்கு உடனடியாக காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.