நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு செய்முறைத் தோ்வுகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

News image

கோப்புப்படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 8:33 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

தமிழகத்தில் மேல்நிலைக் கல்வி எனப்படும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக, செய்முறைத் தோ்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அறிவியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவு மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

இந்தத் தோ்வில் 194 பள்ளிகளைச் சோ்ந்த 18,033 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவா்களுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 164 மையங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த செய்முறைத் தோ்வுகளைக் கண்காணிக்க அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் தோ்வு மையங்களை ஆய்வுசெய்தாா்.