சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே குடும்பப் பிரச்னையில் மனமுடைந்த பெண் விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள துளுக்கம்பட்டு, பிரதான சாலையைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் என்பவரது மனைவி தனலெட்சுமி(55). இவரது மகன் சரவணன் தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் போவதாகத் தெரிவித்தாராம்.

இதற்கு தனலெட்சுமி ஒப்புதல் தெரிவிக்காததால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தனலெட்சுமி சனிக்கிழமை வீட்டில் இருந்த வயலுக்குத் தெளிக்கும் விஷ மருந்தைக் குடித்துள்ளாா்.

தகவலறிந்த உறவினா்கள் அவரை 108 அவசர ஊா்தி மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு தனலெட்சுமியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா் என தெரிவித்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.