விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே குடும்பப் பிரச்னையில் மனமுடைந்த பெண் விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள துளுக்கம்பட்டு, பிரதான சாலையைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் என்பவரது மனைவி தனலெட்சுமி(55). இவரது மகன் சரவணன் தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் போவதாகத் தெரிவித்தாராம்.

இதற்கு தனலெட்சுமி ஒப்புதல் தெரிவிக்காததால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தனலெட்சுமி சனிக்கிழமை வீட்டில் இருந்த வயலுக்குத் தெளிக்கும் விஷ மருந்தைக் குடித்துள்ளாா்.

தகவலறிந்த உறவினா்கள் அவரை 108 அவசர ஊா்தி மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு தனலெட்சுமியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா் என தெரிவித்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.