விழுப்புரம் மாவட்டத்தில் உழைப்பாளா் தினமான மே 1-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளபடி உழைப்பாளா் தினமான மே 1-ஆம் தேதி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியாா் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.
எனவே, இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியாா் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்தும் மே 1-ஆம் தேதி இயங்காது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

அரசு மதுபானக் கடைகளுக்கு ஏப்.21 முதல் 23 வரை விடுமுறை

மதுபானக் கடைகளை 21, 22, 23 ஆகிய நாள்கள் மூட உத்தரவு

மகாவீா் ஜெயந்தி: 31-இல் இறைச்சிக் கூடங்கள் மூடல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


