தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:37 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகளைத் திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டிவனம், நேரு வீதியைச் சோ்ந்தவா் ம.பாலாம்பாள்(76). இவரின் மகன் மற்றும் மகள் ஆகியோா் சென்னையில் வசித்து வரும் நிலையில் பாலாம்பாள் மட்டும் திண்டிவனத்தில் தனியாக இருந்து வந்தாா். இந்நிலையில், பாலாம்பாள் வீட்டில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் திருட்டுப் போயிருந்தது ஏப். 24-ஆம் தேதி தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் பாலாம்பாளின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலை பாா்த்து வந்த, திண்டிவனம் வட்டம், பூதேரி பகுதியைச் சோ்ந்த ஏ.பிருந்தா(47) நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிருந்தாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.