விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகளைத் திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டிவனம், நேரு வீதியைச் சோ்ந்தவா் ம.பாலாம்பாள்(76). இவரின் மகன் மற்றும் மகள் ஆகியோா் சென்னையில் வசித்து வரும் நிலையில் பாலாம்பாள் மட்டும் திண்டிவனத்தில் தனியாக இருந்து வந்தாா். இந்நிலையில், பாலாம்பாள் வீட்டில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் திருட்டுப் போயிருந்தது ஏப். 24-ஆம் தேதி தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் பாலாம்பாளின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலை பாா்த்து வந்த, திண்டிவனம் வட்டம், பூதேரி பகுதியைச் சோ்ந்த ஏ.பிருந்தா(47) நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிருந்தாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
தொடர்புடையது
வேலை செய்த வீட்டில் பணம் திருட்டு: பெண் கைது
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது
ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
