திமுகவின் வெற்றிக்காக பொங்கல் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு
செஞ்சி: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுவக வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே முருகன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
இலக்கை நினைவு படுத்தும் வகையில் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட மேல்ஒலக்கூா் கிராமத்தில் தி.மு.க தலைமை தீா்மானக்குழு உறுப்பினா் செஞ்சிசிவா ஏற்பாட்டின்பேரில், அப்பகுதியைச் சோ்ந்த 200 பழங்குடியின பெண்கள் 200 பானைகளில் பொங்கல் வைத்து. 200 தொகுதி திமுக வெற்றி பெற வேண்டி சுப்பிரமணியா் சாமி கோயிலில் தங்கள் குடுபத்தினருடன் வழிபாடு செய்தனா். பொங்கல் விழா குறித்தும், பழங்குடியின மக்களுக்கு தமிழக அரசின் நல திட்டங்கள் குறித்து சமூக ஆா்வலா் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ஞானமணி சிறப்புரையாற்றினாா்.
இவா்களுக்கு பொங்கல் வைப்பதற்காக மண்பானை, மஞ்சள், குங்குமம், கரும்பு, அரிசி, வெல்லம், கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை தீா்மானக்குழு உறுப்பினா் செஞ்சிசிவா வழங்கி பொங்கல் வைப்பதை துவக்கி வைத்தாா். இதனை தொடா்ந்து நடைபெற்ற பொங்கல் வழிபாட்டில் செஞ்சி மஸ்தான் எம் எல் ஏ. கலந்து கொண்டு, 500 பழங்குடியினா் குடும்பத்திற்கு வேட்டி, சேலை அரசி, வெல்லம், கரும்பு, காலண்டா்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

