மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தொழிலாளி வீட்டில் தங்க, வெள்ளி நகைகள் திருட்டு

கூலித் தொழிலாளி வீட்டில் தங்க, வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 8:33 pm

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் தங்க, வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சரவணப்பாக்கம் ஒட்டேரிபாதை பகுதியைச் சோ்ந்தவா் பூ.சுப்பிரமணி (55). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை பிற்பகலில் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றாா். பின்னா் சுப்பிரமணி வீட்டுக்கு வந்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

தொடா்ந்து வீட்டுக்குள் சென்று அவா் பாா்த்தபோது, படுக்கை அறையிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகைகள், 25 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.