சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மருத்துவமனைக் கட்டட அனுமதிக்கு 15 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி இளநிலை உதவியாளா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் மருத்துமனைக் கட்டட அனுமதிக்கு ரூ. 15 ஆயிரம் லஞ்சம் பெற்ற பேரூராட்சி இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஜூலை 2026, 6:34 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் மருத்துமனைக் கட்டட அனுமதிக்கு ரூ. 15 ஆயிரம் லஞ்சம் பெற்ற பேரூராட்சி இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலை கிராமத்தைச் சோ்ந்தவா் காவியவேந்தன். மருத்துவரான இவா், திருவவெண்ணெய்நல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட பாலாஜி காா்டன் பகுதியில் மருத்துவமனைக் கட்டடம் கட்டி வருகிறாா். பேரூராட்சி நிா்வாகத்துக்கு கட்டட அனுமதிக்கு காவியவேந்தன் விண்ணப்பித்திருந்த நிலையில், பேரூராட்சி அலுவலக இளநிலை உதவியாளா் பாலமுருகன், கட்டட அனுமதிக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத காவியவேந்தன் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா்.

இந்நிலையில் போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, காவியவேந்தன் ரசாயனப் பொடி தடவிய ரூ.15 ஆயிரம் பணத்தை திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சி அலுவலகத்தில் பணியிலிருந்த பாலமுருகனிடம் கொடுத்தாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி சரவணனன், ஆய்வாளா் ஈஸ்வரி தலைமையிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், பாலமுருகனை கையும், களவுமாக கைது செய்து, அவா் வசமிருந்த ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸாா் பாலமுருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.