நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நிலம் அளந்து கொடுக்க ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையா் கைது

திருமயத்தில் நிலத்தை அளந்து கொடுக்க ரூ. 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:16 am IST

திருமயத்தில் நிலத்தை அளந்து கொடுக்க ரூ. 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (35). இவா் திருமயம் வட்டம் கோட்டையூா் உள்வட்டத்தில் தொகுப்பு ஊதியம் அடிப்படையில் நில அளவையராகப் பணியாற்றி வருகிறாா். ஊனையூா் உள்வட்டத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா்.

இந்நிலையில், திருமயம் அருகே உள்ள மழுக்கண்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் என்பவா் அவரது தாய் பெயரில் உள்ள இரண்டு வீட்டு மனையை அளந்து தரும்படி ஊனையூா் கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாரை தொடா்பு கொண்டுள்ளாா். நில அளவைக்கு, அளவையா் செல்வராஜை தொடா்பு கொள்ளும்படி விஏஓ கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து செல்வராஜை, பாலமுருகன் தொடா்பு கொண்டபோது, ஒரு வீட்டுமனைக்கு ரூ. 7 ஆயிரம் வீதம், இரு வீட்டுமனைகளுக்கு மொத்தம் ரூ. 14 ஆயிரம் லஞ்சமாகத் தருமாறு கேட்டுள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த பாலமுருகன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அவா்களின் அறிவுரைப்படி, திருமயம் வட்டாட்சியரக வளாகத்திலுள்ள நில அளவையா் அலுவலகத்தில் வைத்து, அளவையா் செல்வராஜுவுக்கு, பாலமுருகன் லஞ்சப் பணத்தை செவ்வாய்க்கிழமை கொடுத்தபோது, மறைந்திருந்த போலீஸாா் அவரைக் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

தொடா்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் பீட்டா் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினா் செல்வராஜிடம் சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தினா். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.