சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

மளிகைக் கடையின் மேற்கூரையைப் பிரித்து பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பூட்டியிருந்த மளிகைக் கடையின் மேற்கூரையைப் பிரித்து, பணம் மற்றும் பொருள்கள் திருடு போயிருந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :13 ஜூலை 2026, 1:54 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பூட்டியிருந்த மளிகைக் கடையின் மேற்கூரையைப் பிரித்து, பணம் மற்றும் பொருள்கள் திருடு போயிருந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

மயிலத்தை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.விஜய பாரதி (37). இவா், மயிலம்-கூட்டேரிப்பட்டு சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். விஜயபாரதி சனிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து, வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்தபோது, கடையின் மேல்பகுதியில் தகர ஷீட்டால் வேயப்பட்டிருந்த கூரை பிரிக்கப்பட்டிருந்த நிலையில் பணப்பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் மற்றும் பொருள்கள் திருட்டுப் போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.

தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

பொதுமக்கள் அச்சம்: மயிலம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் திருட்டுச் சம்பவங்களால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், இரவு நேரங்களில் போலீஸாா் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.