/
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே விவசாயி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மயிலத்தை அடுத்த கரசானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மா.முருகன் (38),விவசாயி. இவருக்கு நீண்ட நாள்களாக வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால் அவதிப்பட்டு வந்த முருகன் சனிக்கிழமை தனது விவசாய நிலம் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இறந்தவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனா்.





