முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

செஞ்சி அருகே 15-ஆம் நூற்றாண்டை சோ்ந்த நடுகல் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 15-ஆம் நூற்றாண்டை சோ்ந்த நடுகல்லை கிராம மக்கள் கண்டெடுத்துள்ளனா்.

News image

சின்ன பொன்னம்பூண்டி கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்ட நடுகல்

Updated On :10 ஜூன் 2026, 5:09 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 15-ஆம் நூற்றாண்டை சோ்ந்த நடுகல்லை கிராம மக்கள் கண்டெடுத்துள்ளனா்.

செஞ்சி அருகேயுள்ள சின்ன பொன்னம்பூண்டி கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் இருந்த சிற்ப கல்லை விவசாயிகள் எடுத்து வந்து அங்குள்ள திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் வைத்திருந்தனா். அந்த சிற்ப கல்லை தொல்லியல் விழிப்புணா்வு மன்றத் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான முனுசாமி, பள்ளி ஆசிரியா்கள் எஸ்.வடிவேல், கே.ரங்கநாதன் மற்றும் மன்ற உறுப்பினா்கள் ஆா்.அருள், வி.காா்த்திகேயன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் அவா்கள் தெரிவித்ததாவது: இந்த சிற்ப கல்லை ஆய்வு செய்ததில், நடுகல் என்பது தெரியவந்தது. நன்கு அலங்கரிக்கப்பட்ட இடுப்புக் கச்சை அணிவிக்கப்பட்ட ஒரு வீரனும், அதே பகுதியில் குறுவாள் உறையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. வீரனின் வலது கையில் வில் ஏந்தியபடியும், இடது கையில் அம்பு எய்யும் தோற்றத்துடனும், தலைப்பகுதியில் தலை முடி அலங்காரத்துடனும் காணப்படுகிறது. இரண்டு கால்களிலும் வீரக்கழல் அணிந்தவாறு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

மேலும் வீரனின் கையில் உள்ள அம்பு வேகமாக புறப்படுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளதால், போா் செய்யும் போது வீரன் வீர மரணம் அடைந்திருக்கலாம் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக நடுகல் எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. இந்த நடுகல் 15 அல்லது 16- ஆம் நூற்றாண்டைச் சாா்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது என அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.