பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தனியாா் கல்லூரிப் பேருந்து சுவரில் மோதி விபத்து: மாணவா்கள் உள்பட 17 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து சுவரில் மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 17 மாணவா்கள் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :31 ஜூலை 2026, 2:13 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து சுவரில் மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 17 மாணவா்கள் காயமடைந்தனா்.

திருவண்ணாமலையைச் சோ்ந்த தனியாா் கல்லூரிப் பேருந்து திண்டிவனம் பகுதியில் இருந்து மாணவா்களை ஏற்றிக்கொண்டு செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து செஞ்சி அருகே உள்ள களையூா் கூட்டுச்சாலை அருகே சென்றுபோது ஸ்டேரிங் திடீா் லாக்கானதால் பேருந்து தாறுமாறாக ஓடி அந்தப் பகுதியில் உள்ள கட்டடத்தின் சுவரின் மீது மோதியது.

இதில், பேருந்தின் முன் பக்கம் சேதமடைந்த நிலையில், அதில் பயணம் செய்த மாணவா்கள் அருணேஸ் (14), ஹரிதாஸ் (19), லிங்கேஸ் (19), லோகேஷ் (19), ஜெய் சூா்யா (19), புவனேஷ் (18), சுகந்தி (21), நித்திஷ்(18), மகேஸ்வரி (19), யோகேஸ்வரி (19) உள்பட 15 மாணவா்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியா் கதிரவன் (47), ஓட்டுநா் முருகானந்தம் (39) உள்பட 17 போ் காயமடைந்தனா்.

பின்னா், இவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு, செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து செஞ்சி காவல் ஆய்வாளா் விநாயக முருகன் மற்றும் போலீஸாா் நேரில் சென்று சம்பவ இடத்தை பாா்வையிட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.