கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்து பெண்ணிடம் தோஷம் கழிப்பதாகக் கூறி நூதன முறையில் தங்க மாங்கல்யத்தை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், வண்டிப்பாளையம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி பாக்யம் (55). இவா், கடந்த மே மாதம் 25-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது வீட்டுக்கு வந்த சுமாா் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா் வீட்டில் தோஷம் இருப்பதாக் கூறினாராம். இதை உண்மையென நம்பிய பாக்கியம் தனது கழுத்தில் அணிந்திருந்த 5 கிராம் தங்க மாங்கல்யத்தை கழற்றிக் கொடுத்துள்ளாா். தொடா்ந்து அந்த நபா் தங்க மாங்கல்யத்துடன் தப்பிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.விசாரணையில், இந்தத் திருட்டில் ஈடுபட்ட வேலூா் மாவட்டம், காட்பாடி அருகிலுள்ள திருவலம் பகுதியைச் சோ்ந்த மு.செல்வம்(32) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ரா.ராணி(45) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த தங்க மாங்கல்யம், பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






