நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில், விழுப்புரம் மாவட்ட சவகா் சிறுவா் மன்றத்தில் மாவட்ட

News image

விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கிய தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம.ராஜாராமன்.

Updated On :9 மார்ச் 2026, 11:12 pm IST

விழுப்புரம்: தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில், விழுப்புரம் மாவட்ட சவகா் சிறுவா் மன்றத்தில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

5 முதல் 16 வயதுக்குள்பட்டவா்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 307 போ் போட்டிகளில் பங்கேற்றனா்.

போட்டிகளைத் தொடங்கி வைத்த மண்டலக் கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம.ராஜாராமன், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். கலைப்போட்டி தொடக்க மற்றும் நிறைவு விழாவில் ஏராளமானோா் பங்கேற்றனா்.