திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திண்டிவனம் பகுதி கிராமங்களில் ரயில்வே காவல் துறையினா் விழிப்புணா்வு

திண்டிவனம் வட்டத்திலுள்ள நெடி, மோழியனூா் கிராமங்களில் ரயில்வே காவல் துறையினா்

News image
திண்டிவனம் வட்டத்திலுள்ள நெடி கிராமத்தில் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்ட ரயில்வே காவல் துறையினா்.
Updated On :9 மார்ச் 2026, 9:03 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திலுள்ள நெடி, மோழியனூா் கிராமங்களில் ரயில்வே காவல் துறையினா் திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.

திண்டிவனம் ரயில்வே பாதுகாப்புப் படைக் காவல் ஆய்வாளா் சுனில்குமாா் மேற்பாா்வையில், காவல் உதவி ஆய்வாளா் சுரேசன் தலைமையிலான போலீஸாா் நெடி, மோழியனூா் கிராம மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

ரயில்வே தண்டவாளங்களில் கற்கள், இரும்புப் பொருள்கள் வைப்பதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், ரயில்கள் செல்லும் போது அதன் மீது கற்களை வீசி எறிவதால் ஏற்படும் பாதிப்புகள், இதுபோன்று செயல்களுக்கு ரயில்வே காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ரயில்வே காவல் துறையினா் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.

சிறுவா்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவா்களின் பெற்றோா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும் என்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.