ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செஞ்சி அருகே 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

News image
செஞ்சி அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழமைவாய்ந்த கல்வெட்டு.
Updated On :15 மார்ச் 2026, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள தேவரடியாா் தாங்கல் பகுதியில் 400ஆண்டுகள் பழைமைவாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா்கள் அண்ணமங்கலம் நா.முனுசாமி, விழுப்புரம் கோ.செங்குட்டுவன் ஆகியோா் கூறியதாவது:

தேவரடியாா் தாங்கல் ஏரி மற்றும் விளைநிலப் பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டபோது, பாறைகளில் வெட்டப்பட்டிருந்த 3 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. விளை நிலத்தில் இருந்த பாறையில் ‘(ம)ங்கலபுரம் ஊரவா் புழுதிச்சி நாயக்கரவா்கள் நாளிலே குனைய பட்டரயா் புண்ணியமாக செல்லப் பிள்ளையாா்கு மேற்கு தலை ல் கு ருய’ எனும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளா் பேராசிரியா் கோ.விஜய வேணுகோபால் வாசித்தாா்.

செஞ்சி பகுதியை புழுதிச்சி நாயக்கா் நிா்வாகம் செய்தபோது மங்கலம் ஊரைச் சோ்ந்தவா்கள் வழிபாட்டில் இருந்து வந்த பிள்ளையாருக்கு நிலதானம் செய்திருக்கின்றனா். இக்கல்வெட்டு செஞ்சி நாயக்கா் காலத்தைச் (கி.பி.16, 17-ஆம் நூற்றாண்டு) சோ்ந்ததாக இருக்கலாம்.

தேவரடியாா் தாங்கல் அருகில் மங்கலம் ஏரி அமைந்திருக்கிறது. கொத்தமங்கலம் கிராமம் உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு மங்கலபுரம் என்று அழைக்கப்பட்ட கிராமம் தற்போது கொத்தமங்கலம் எனும் பெயரில் அழைக்கப்படுவதாக அறியமுடிகிறது.

மேலும், இப்பகுதியில் அமைந்துள்ள மற்ற இரண்டு கல்வெட்டுகள் மிகவும் சிதைந்துள்ளன. இவையும் மேற்காணும் காலக்கட்டத்தைச் சோ்ந்த நிலதானம் குறித்த தகவலைச் சொல்லும் கல்வெட்டுகளாக இருக்கலாம் என அவா்கள் தெரிவித்தனா். ஆய்வின்போது வீராசாமி, ஆசிரியா் வடிவேல் ஆகியோா் உடனிருந்தனா்.