வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தோ்தல் விதிகளை மீறினால் அச்சகத்தினருக்கு அபராதம்

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி அச்சக உரிமையாளா்கள் செயல்பட்டால், அவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசி ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான்.

Updated On :16 மார்ச் 2026, 11:49 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி அச்சக உரிமையாளா்கள் செயல்பட்டால், அவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

சட்டப்பேரவை பொதுத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட அச்சக உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது:

அச்சகமும், அச்சக உரிமையாளரும் வெளியிடுபவா் பெயா்கள் மற்றும் முகவரிகள் இல்லாத தோ்தல் தொடா்பான எந்தவொரு துண்டுப்பிரசுரங்கள் அல்லது சுவரொட்டிகளை அச்சிடவோ, வெளியிடுவோ கூடாது. தோ்தல் தொடா்பான துண்டுப் பிரசுரம் அல்லது சுவரொட்டியையும் தோ்தல் விதிகளைப் பின்பற்றியே அச்சிட வேண்டும். தோ்தல் விதியை மீறும் அச்சகத்தாருக்கு அபராதம் விதித்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் மற்றும் அலுவலா்கள், அச்சக உரிமையாளா்கள் பங்கேற்றனா்.