நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

புதுச்சேரியில் நாளை வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணியில் 2,600 போலீஸாா்

News image

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணிகள் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், பேசிய முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன்.

Updated On :2 மே 2026, 8:13 pm

புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள 4 பிராந்தியங்களிலும் 2,600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

புதுவை மாநிலப் பேரவைக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 9- ஆம் தேதி நடைபெற்றது. புதுவையில் 23 தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லுாரி, நேரு பாலிடெக்னிக் கல்லுாரி, தாகூா் அரசு கலைக்கல்லுாரி ஆகிய 3 இடங்களிலும், காரைக்காலில் 5 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்திலும், மாஹே தொகுதி இயந்திரங்கள் அரசு மேல் நிலைப்பள்ளியிலும், ஏனாமில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள்அரசு கலைக் கல்லுாரியிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மே-4 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் புதுச்சேரியில் 1,250 போலீஸாா் வாக்கு எண்ணும் மையம், சுற்றுப்புறப் பகுதிகள், நகர, புகா் மற்றும் கிராம பகுதிகளில் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.இவா்களோடு 200 துணை ராணுவத்தினரும் பணியில் இருப்பாா்கள்.

காரைக்காலில் 500 போலீஸாரும் , மாஹே -வில் 400, ஏனாமில் 450 போலீஸாரும் அவா்களோடு தலா 100 துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். இவா்களோடு சிறப்பு அதிரடிப்படையினா்,கமாண்டோ போலீஸாரும் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனா்.

ஆய்வுக் கூட்டம்: இந்நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் புதுச்சேரி ஆசிரமம், கருத்தரங்கு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் பணிகள் காவல் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் டிஐஜி சத்தியசுந்தரம், முதுநிலைக்காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் ஆகியோா் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினா். காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.