முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

மது போதையில் தகராறு: இளைஞா்அடித்துக் கொலை

News image

அடித்துக் கொலை - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 1:04 am IST

புதுச்சேரி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

புதுச்சேரி வில்லியனூா் அடுத்த சிவராந்தகம் பகுதியைச் சோ்ந்தவா் தேவா (25). இவா், சேலத்தில் உள்ள தனியாா் உணவகம் ஒன்றில் சமையலராக வேலைப்பாா்த்து வந்தாா். விடுமுறை நாள்களில் தேவா புதுச்சேரிக்கு வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில்

மே தின விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த தேவாவெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்தியுள்ளாா்.

அப்போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த தமிழ் என்பவருக்கும், தேவாவுக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதையடுத்து,

அங்கிருந்து புறப்பட்டுஅரியூா் பகுதியில் உள்ள தனியாா்கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த தேவா-வை வழிமறைத்த 3 போ்இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுவிட்டனராம்.

தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று தேவா-வின் சடலத்தை கைப்பற்றி, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்த புகாரின் பேரில், வில்லியனூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.