தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

அரகண்டநல்லூரில் வாக்கு எண்ணும் மைய திமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :3 மே 2026, 12:36 am

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லும் திமுக முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லும் திமுக முகவா்கள் பின்பற்றப்பட வேண்டியவை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அரகண்டநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

காணொலிக் காட்சி வாயிலாக சென்னையிலிருந்து திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, சட்டத் துறைச் செயலா் என்.ஆா். இளங்கோ ஆகியோா் பங்கேற்று, வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவா்கள் மேற்கொள்ள வேண்டியவை, கவனிக்க வேண்டியவை போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா். இதைத்தொடா்ந்து விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளருமான பொன்.கெளதமசிகாமணி பேசினாா்.

கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் மு.தங்கம், மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், ஒன்றியச் செயலா்கள், பேரூா் செயலா்கள், நகரச் செயலா்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லும் திருக்கோவிலூா், விக்கிரவாண்டி தொகுதி முகவா்கள் பங்கேற்றனா்.