விழுப்புரம் மாவட்டம், நங்கிலி கொண்டான் சுங்கச் சாவடியில் தீடீரென கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் கனரக வாகன ஓட்டிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
புதுச்சேரி - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சி - திண்டிவனம் இடையே நங்கிலி கொண்டான் என்ற இடத்தில் சுங்கச்சாவடி உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி காா், வேன் ஆகியவைகளுக்கு ஒருமுறை சென்று வர ரூ. 65 வசூலிக்கப்படுகிறது. சென்று, திரும்ப ரூ.95-ம், வணிக ரீதியான வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.50-ம் வசூலிக்கப்படுகிறது.
இதே போல் வணிக ரீதியான வாகனங்களுக்கு ஒரு முறை சென்று, வர ரூ.105-ம், சென்று திரும்பி வர ரூ.155-ம், 50 முறை செல்ல சலுகை கட்டணமாக ரூ.3,435-ம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் பேருந்துகளுக்கு ஒருமுறை சென்று வர ரூ.215-ம், சென்று திரும்பி வர ரூ.325-ம், 50 முறை சென்று வர சலுகை கட்டணமாக ரூ. 7,195-ம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டண உயா்வால் வாகன வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகன விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

ஏற்காட்டை சுற்றிபாா்க்க ரூ.300 கட்டணத்தில் சிறப்பு பேருந்து!

கண்டாச்சிபுரம் அருகே சிறுமி மா்ம மரணம்: போலீஸாா் தீவிர விசாரணை

சுங்கவரி சோதனைச் சாவடியில் ஒருவழிப்பாதை: வாகன ஓட்டிகள் அவதி
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



