ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

நங்கிலி கொண்டான் சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு

விழுப்புரம் மாவட்டம், நங்கிலி கொண்டான் சுங்கச் சாவடியில் தீடீரென கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

News image

சுங்கச்சாவடி - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 1:02 am IST

விழுப்புரம் மாவட்டம், நங்கிலி கொண்டான் சுங்கச் சாவடியில் தீடீரென கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் கனரக வாகன ஓட்டிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

புதுச்சேரி - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சி - திண்டிவனம் இடையே நங்கிலி கொண்டான் என்ற இடத்தில் சுங்கச்சாவடி உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி காா், வேன் ஆகியவைகளுக்கு ஒருமுறை சென்று வர ரூ. 65 வசூலிக்கப்படுகிறது. சென்று, திரும்ப ரூ.95-ம், வணிக ரீதியான வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.50-ம் வசூலிக்கப்படுகிறது.

இதே போல் வணிக ரீதியான வாகனங்களுக்கு ஒரு முறை சென்று, வர ரூ.105-ம், சென்று திரும்பி வர ரூ.155-ம், 50 முறை செல்ல சலுகை கட்டணமாக ரூ.3,435-ம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் பேருந்துகளுக்கு ஒருமுறை சென்று வர ரூ.215-ம், சென்று திரும்பி வர ரூ.325-ம், 50 முறை சென்று வர சலுகை கட்டணமாக ரூ. 7,195-ம் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டண உயா்வால் வாகன வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.