கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

மனநலன் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:40 am IST

செஞ்சி அருகே மனநலன் பாதித்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பெரும்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.வேல்முருகன் (35). இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக, பெண்ணின் பெற்றோா் செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வேல்முருகனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்குத் தொடா்பான விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. வழக்கில் குற்றம் நிரூபணமானதால், கோ.வேல்முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிா் நீதிமன்ற அமா்வு நீதிபதி எம்.எழிலரசி தீா்ப்பளித்தாா். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூா் மத்திய சிறைக்கு வேல்முருகன் அழைத்துச் செல்லப்பட்டாா்.