சிதம்பபம் ஆர்.கே.ஜி. பவுன்டேஷன் மற்றும் வின்சாஃப்ட் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் இணைந்து அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியை மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தியது.
நிகழ்ச்சியில், பயிற்சி நிறுவன மாணவ, மாணவிகள் அன்னைக்கு பாதபூஜை செய்து வழிபட்டனர். நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மேலும் அன்னையர்களுக்கு நினைவுப் பரிசுகளை அவர் வழங்கினார். நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார் முன்னிலை வகித்து இலவச கணினிப் பயிற்சி பெற்ற 50 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
ஆர்.கே.ஜி. பவுன்டேஷன் தலைவர் நிர்மலா கோதண்டராமன் வரவேற்றார். ரபியாபேகம், சித்ரா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
சிதம்பரம் தகதிமிதா கலைக்குழு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வேதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பொருளர் கௌரி கோதண்டராமன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். ஹேமலதா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம்

இந்த மலிவான அரசியல் வேண்டாம்: கே.என். நேருவுக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

அரசின் நிதிநிலைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமும் படிப்படியாக செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


