நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில்  விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியது.

Updated On :13 மே 2013, 12:44 am IST

கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியது.

கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் இளம் வணிகவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.  கடந்த 11-ம் தேதி வரை 400 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில், "விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 14-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.27. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் தங்களின் ஜாதிச் சான்றிதழின் அசல் மற்றும் நகலைக் காண்பித்து ஒரு விண்ணப்பம் மட்டுமே இலவசமாகப் பெறலாம். கூடுதலாக தேவைப்படும் விண்ணப்பத்துக்குப் பணம் செலுத்த வேண்டும். மற்ற வகுப்பினர் விண்ணப்பத்துக்குரிய பணத்தை செலுத்தி பெறலாம்.

கடந்தாண்டு 6,000 விண்ணப்பங்கள் வரை விற்பனையாயின. இந்தாண்டு முதல் கட்டமாக 5,000 விண்ணப்பம் வரை அச்சிடப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்ப டும் பட்சத்தில் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.