சிதம்பரம் இந்தியன் வங்கியில் சனிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு மீட்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
சிதம்பரத்தில் நகைக் கடைகள் நிறைந்தப் பகுதியான காசுகடைத் தெருவில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு திடீரென வங்கி அலாரம் ஒலித்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து, வங்கி முன்பு திரண்டு சிதம்பரம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் வங்கி அதிகாரிகளை அழைத்து கதவை திறந்தபோது வங்கியின் முதல் மாடியில் தீப்பற்றியது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத் துறையினர் நிலைய அலுவலர் ஜகாங்கீர் முகமது தலைமையில் விரைந்து சென்று வங்கி முதல் மாடியில் உள்ள சர்வர் அறையிலிருந்து புகை வருவதைக் கண்டறிந்து மின்சப்ளையைத் துண்டித்து அங்குள்ள ஏர்கண்டிஷன் மிஷின் தீப்பிடித்து எரிந்ததை தடுத்து அணைத்தனர். அலாரம் அடித்ததால் வங்கியில் தீப்பிடித்தது தெரியவந்து, உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், வங்கியில் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல் போன மகளைக் கண்டுபிடித்துத் தரக் கோரி மறியல்
லாரி சக்கரத்தில் சிக்கி சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

உதகை அருகே சிறுத்தை உயிரிழப்பு

21 வயதுக்குள்பட்டவா்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது: டாஸ்மாக் ஊழியா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
