சப்தமாதர்கள்: சப்தமாதர் அல்லது சப்த கன்னியர் என்று குறிப்பிடப்படுவோர் பிராமி, மகேஸ்வரி, கெளமாரி, வைணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி போன்றவராவர். சப்த மாதர்களுக்கு தொடக்க காலத்தில் படிமங்கள் எதுவும் உருவாக்கப்படாமல் ஏழு கற்களை பிரதிஷ்டை செய்து கடவுள்களாக எண்ணி வணங்கினர். முற்காலச் சோழர்கள் தாங்கள் எடுப்பித்த சிவாலயங்களில் அஷ்ட பரிவார தெய்வங்கள் என்று பெயரிட்டு சூரியன், சந்திரன், சப்தமாதர்கள், கணபதி, முருகன், மூத்ததேவி, சண்டிகேஸ்வரர், பைரவர் என அனைவருக்கும் திருஉருவம் செய்து தேவக்கோட்டத்தில் (கருவறை சுவற்றில்) அமைத்தனர். நாகசேரி குள வடகரையில் உள்ள சப்தமாதர்கள் பதஞ்சலி முனிவருக்காக வானுலக்கில் இருந்து வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. சோழர்கள் தங்கள் கட்டிய கோயில்களில் அனைத்திலும் சப்த மாதர்களுக்கும் திருமேனி எடுத்து சிறப்பித்தனர்.