தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் ஜெ. பேரவை மக்கள் முகாம்: ஏ.அருண்மொழிதேவன் எம்பி தொடங்கி வைத்தார்

கூட்டத்திற்கு மாவட்ட பேரவைச் செயலாளர் எம்.உமாமகேஸ்வரன் தலைமை வகித்தார். நகர பேரவை இணைச் செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, பேரவைத் தலைவர் பி.லோகநாதன் ஆகியோர் முன்னிலை

News image
Updated On :26 ஜூலை 2014, 1:58 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி சாதனைகளை விளக்கும் ஜெ. பேரவை மக்கள் மக்கள் முகாம் தெருமுனை பிரசாரக்கூட்டம் சிதம்பரம் காந்திசிலை அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட பேரவைச் செயலாளர் எம்.உமாமகேஸ்வரன் தலைமை வகித்தார். நகர பேரவை இணைச் செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, பேரவைத் தலைவர் பி.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் வரவேற்றார். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி முகாமை தொடங்கி வைத்துப் பேசினார். தலைமைக்கழக பேச்சாளர் நல்லாற்று நடராஜன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் செல்விராமஜெயம் எம்எல்ஏ, நாக.முருகுமாறன் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், தொகுதி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், தலைமைக்கழக பேச்சாளர் தில்லை கோபி, கூட்டுறவு நகர வங்கி தலைவர் சொ.ஜவகர், கீரப்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஆர்.ஜெயபாலன், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், பால்வளத்தலைவர் சி.கே.சுரேஷ்பாபு, பொதுக்குழு உறுப்பினர் தில்லை சேகர், நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், குமார், மணிவேல், கருப்பு ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர பேரவைச் செயலாளர் கே.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.